Saturday, 10 November 2012

கௌரி-20

இன்று தரிசிக்கவிருப்பது கேரளநாட்டில் கோயில்
கொண்ட சோட்டானிக்கரை பகவதித்தாய்.


சீர்பெறுசேரநாடு சோட்டானிக்கரைதன்கண்
காண்பார் பணிந்தேத்தும் பகவதித்தாயே
தாயறியாவொன்றேது சேய்தன் மனத்தகத்தில்
அகம்புறமனைத்தும் நிறைந்திடுமன்னையே
அன்னைதன் பரிவதற்குஅறியேனோரீடிங்கு
ஈடிலாவரமது ஈந்திடு அம்மையே
அம்மைகண் வேண்டினேன் அத்தன்வரமருள
அருள்ஞானவிளக்கே அறிவறியா ஞானவேணி
வேணிகழல் சரணே வேண்டுவரம் ஈவாயே.....


No comments:

Post a Comment