நல்லுழவர் கைப்பட்ட நன்முத்துமணிகள்
தன்னாழங்காட்டி பொன்மணிகள் தான் சொரியும்
எவ்வளமும் கொழித்துநிற்கும் வண்மையதுசேர்
உள்ளாத வரமதுவும் அள்ளிவரும் இன்மாதம்
எந்நாளும் ஒளிதந்து காத்திடும் மன்னவனை
பொன்னொளியான் பகலவனை போற்றிடும் திருநாளாம்
வெய்யொளிபோல் துலங்கட்டும் இப்புவியோர் வாழ்வதுவும்
தைமகளே வருக! நல்வரமே தருக!

No comments:
Post a Comment