Friday, 26 October 2012

கௌரி -3

இன்றைய தெரிவு யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் அமைந்த மட்டுவில் எனும் ஊரில் தலங்கொண்டு அருள்பாலிக்கும் பன்றித்தலைச்சி அம்மன்..அம்மனுக்கு இந்தப்பெயருக்கான  காரணத்தை பின்வரும்
இணைப்பில் வாசித்து அறியலாம்.பன்றித்தலைச்சி

உளமேற்றும் பக்தன்றன் இடர்தீர்க்கவென்று
களவாற்றி தலைமாற்றி காத்திட்ட தாயே
பதம்போற்றி நின்றோமே பரமேசுவரியுந்தன்
வதஞ்செய வருவாயே வருத்திடு வினையையெலாம்
எழில்கொஞ்சும் திருவூராம் மட்டுவிற்பதியினிலே
தலங்கொண்டு அருளீயும் தயாளினியே

No comments:

Post a Comment